Showing posts with label Periyar sayings. Show all posts
Showing posts with label Periyar sayings. Show all posts

Sunday, August 30, 2009

Periyar's Sayings - Marriage / திருமணம்

Marriage

Married couple should behave to each other like bosom friends. In any matter, the bridegroom should not have the vnity that he is the husband. The bride also should behave in such a manner as not to think of herself as her husband’s slave and cook.Married couple should not be hasty in bringing forth children. It will be good if children are born at least three years after the marriage.

The terms `Husband’ and `Wife’ are inappropiate. They are only companions ad partners. One does not slave for other. They both have equal status.

It is enough, if the man and woman sign and decalre at the Register’s Office that they have become `companions for life’. Such a wedding on the basisof a mere signature has more dignity, advantage and independence.

Marriage does not concern the wedding couple only. It is linked with the progress of the nation.


திருமணம்

என்று தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்த போது தனக்குச் சிரம்ப்பரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்யமுன் வந்திருக்கமாட்டான். எனவை இவ் வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில், பெண் ஒருவனது ஒத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து பிறகு அவளே அவனுக்குச் சொத்துமானாள். பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான் அவளைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவுமனா நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனிதச் சுபாவம் இப்படித்தான் இருக்கும்; அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப்போகும் வாரிசு, தனக்கே பிறந்ததகா - தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதே ஆகும்.

திருமணத்தின் அடிப்படைத் தேவை

கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நூகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும், ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.

திருமணம் பற்றிய கொள்கை

திருமணத்தின் அடிப்படையே இதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மண மக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சிநேகிதர்களாய் இருந்து அன்புடனும், ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகிக் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்கக் கூடாது என்பது எங்களுடைய அடுத்த கொள்கை.

வாழ்க்கைத் துணைவர்களின் உறவு

மனிதன் ஒருவனே இருந்து காரியம் ஆற்றுவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே வாழ்வுக்கு ஒரு துணை வேண்டியுள்ளது. அந்தத் துணையினைத் தேடிக் கொள்வதுதான் திருமணம். வெறும் துணை என்று மட்டும் வைத்தால் பலன் தராது. துணை என்றால் நட்பு முறையில் இருக்க வேண்டும். நண்பனுக்கு அடியவன் என்ற நிலையில் இருக்க வேண்டும். உண்மையான நட்புக்கு இருவரும் ஒன்றாக வேண்டும். பேதம் ஏற்படுமேயானால் ஒத்துப் போக ஒருவரை ஒருவர் முந்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நட்பு மலரும். அதுதான் உண்மையான துணைவர்களுக்கு இருக்க வேண்டும். துணைவர்கள் என்றால் சம உரிமை உடைய துணைவர்களாக இருக்க வேண்டும்.

மணமக்களின் உரிமை

நாங்கள் செய்து வைக்கும் திருமணத்தில் மணமகளும் மணமகனும் சம உரிமை உடையவர்கள். இருவரும் சினேகிதர் மாதிரி. இருவரிலும் உசர்வு தாழ்வு இல்லை. உதாரணமாக இரண்டு பேர்கள் சேர்ந்து பகுதி பகுதி முதல் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்குகின்றார்கள். இந்த வியாபாரத்தில் இரு வருக்கும் எப்படிச் சம உரிமையும், இடமும், லாப நஷ்டத்தில் சமபங்கும் இருக்கின்றதோ அது போலத்தான் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்ட மணமக்கள் இருவருக்கும் உள்ள உரிமை யாகும்.

காதல்

ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்உத கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? குடிகாரனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் - ஆசை - இஷ்டம்.

காதலின் நிலைபேறு

உண்மையாகவே ஒருவன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டான் ஆனால் அவள் வேறு ஒருவனிடம் காதல் கொண்டு விட்டதாய்க் கருத நேர்ந்தால் - அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் - தன் மனத்துக்குச் சந்தேகப்படும்படி ஆகிவிட்டால் அப்போதுகூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேக்ப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடியது கற்றமான காதலா எனபதற்கு என்ன மறு மொழி பகர முடியும்? காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், இலட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, இலட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத்தையும் அது பயன்படாததையும் காணலாம்.

காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிடச் சிறிது கூடச் சிறந்தது அல்ல… அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் - பெண்களுக்குள் புகுத்தி வட்டதால், ஆண் - பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி எப்படிப் பக்திமான் என்றால் இப்படி எல்லாம் இருப்பான் என்று சொல்லப் பட்டதால் அனேகர் தங்களைப் பக்திமான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் பூசுவதும், பட்டை நாம்ம் போடுவதும், சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி வழுவதும், வாயில் சிவ சிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்தும் தங்களைப் பக்திமான்களாகக் காட்டிக் கொள்கின்றார்களோ - அதுபோலவும், எப்படிக் குழந்தைகள் தூங்குவதுபோல் வேசம் போட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காகத் தூங்கினால் கால் ஆடுமே என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைத்துக் கொள்ள வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அது போலவும்; எப்படிப் பெண்கள் இப்படி, இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய்க் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகிறார்களோ அதுபோலவும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால், அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால், அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகின்றார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேடத்தை யெல்லாம் போடுவார்கள். ஆகவே, ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிடக் காதல் என்பதற்காக வேறு ஒன்றும் இல்லை.

திடீரென்று காதல் கொள்வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக்காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் - காதலும் பொய் கடவுளும் பொய் என்றதான் அர்த்தம்.

பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும் மனைவியுமாக ஏற்று நடக்கச் சம்மதிக்கிறோம் என்ற மட்டும்தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் நாங்களிருவரும் ஒருவருக் கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்வதோடு ஒருவருக் கொருவர் எல்லாத் துறையிலும் இன்ப - துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்து வாழ உறுதி கூறுகின்றோம்’ என்று சொல்லும் முறையைக் கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?

Tuesday, August 18, 2009

Periyar's Sayings - Rationalism/பகுத்தறிவு

Rationalism

Why is it that a foreigner is required to find out the hieght of Himalays, while we claim to have discovered the Seven Worlds, above and the Seven more below; why is that when we claim to have the ebility expound Lord Nataraja’s Cosmic Dance, the construction of this simple loud speaker in front of us is an enigma; we should really contemplate on these aspects. You should come forward to use reason to enlarge your general knowledege.

Man is considered superior to other beings in this world, because he has limitless capacity for knowledge, People in other lands have advanced greatly, utilizing this knowledge. But our countrymen owing to lack of use of this knowledge, are abjectly deteriorating. Stating that ours is a land of enlightenment, we build tanks and temples; in other lands, men fly in sapce and amaze the whole world.

What we need today is growth of knowledge, in order to advance in every field. Knowledge should have its sway.

It is through rationality that man’s longevity has been increased and his mortality has been significantly reduced.


பகுத்தறிவு

பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.

கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக் கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு இந்த ஒலி பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பது மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொது அறிவு வளரவும் விசய ஞானம் உண்டாகவும் உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்பட வேண்டும்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகு கலமாக நடந்து வருவதாக்த் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

பகுத்தறிவாளனது நம்பிக்கை

எந்தக் காரியத்தை மனிதன் நம்புவதாக இருந்தாலும் அது அவனுடைய பஞ்சேந்திரியங்களில் ஒன்றுக்கோ திரிகரணங்களில் ஒன்றுக்கோ புலப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தப்படி நாம் நடந்தால் அறிவு வளரும். சிந்தனை ஏற்படும். மனிதன் அறிவை மதிக்காமல் சிந்தனையை இலட்சியம் செய்யாமல் அவன் மனதில் கடவுள், மதம், சாத்திரம் என்பவைகளின் பெயரால் மடைமையைப் புகுத்திவிட்டனர்.

பகுத்தறிவாளனது சிந்தனை

பகுத்தறிவு கொண்டு பார்க்கும்போது எந்தப் பற்றும் அற்ற நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும். பகுத்தறிவுக் காரனுக்கு எந்தவிதப் பற்றும் இருக்கக் கூடாது என்றேன். ஏன்? கடவுள் பற்று உடைய ஒருவன் கடவுள் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவானேயானால் ஏற்கனவே அவற்றில் பற்றுக கொண்டவன் ஆனபடியால் எப்படி உண்மையைக் காண அவனால் முடியும்?

பெரியோர், மேன்மக்கள்

ஒருவன் எப்படிப்பட்டமனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுபவனாயினும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதேயாகும்.

நம் மக்களுக்கு இன்று வெகுவாகத் தேவைப்படுவது அறிவுதான். சில துறைகளிலே மனிதன் செலுத்துகிற அறிவைச் சில துறைகளில் கண்டிப்பாய்ச் செலுத்த மறுக்கிறான். சாணியைக் கொண்டு போய் வைத்து இது ஒரு அருமையான உணவாகும் என்று சொல்லிச் சாப்பிடச் சொன்னால் யாராவது சாப்பிடுவார்களா? பார்த்தவுடனேயே இது சாணி அசிங்கம் என்று சொல்லிவிடுவார்களே! ஆனால் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து இது சாமி என்று சொன்னால் தலையில் குட்டுப் போட்டுக் கொண்டு விழுந்து கும்பிடுகிறார்கள். .. ஏனென்றால் கடவுள் சங்கதி என்று சொன்னால் நம் மக்கள் அதைப் பற்றிச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாய் நம்ப வேண்டும். அது விசயத்தில் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை. இந்த முட்டாள் தனம் அதாவது அறிவுக்குப் பூரணச் சுதந்திர மற்ற அடிமைத் தன்மை ஒழிந்து பகுத்தறிவு வளர வேண்டும்.

நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயத்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூட நம்பிக்கைக் கடவுளைவிடக் குருட்டுப் பழக்க மதத்தைவிடச் சீர்திருத்தக் கடவுளும் பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.

இராட்சதன் (இரண்ணியாட்சன்) பூமியை எப்படிச் சுருட்டினான்? பூமிதான் பந்துபோல இருக்கிறதே? அவன் அதை உருட்டுவதானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே ஒழிய்ச் சுருட்ட முடியாது… சுருட்டினானே அவன் சுருட்டும் போது தான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்?… அவன் சமுத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்தச் சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போயிருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம்; இது வேறு உலகமா?

புத்தரின் பகுத்தறிவுப் புரட்சி

ஏதோ 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தன் என்ற ஒருவர் தோன்றி இப்போது நாங்கள் எப்படி அறிவுப் பிரசாரம் செய்கின்றோமோ அது போல் அந்தக் காலத்தில் செய்தார். கடவுளாவது, ஆத்மாவாவது இதுகள் சுத்தப் புரட்டு; எதனையும் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்துப் புத்திக்கு எது சரி என்று படுகின்றதோ அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய கடவுள் சொன்னார், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. வெகுகாலத்துக்கு முன் ஏற்பட்ட கருத்தாயிற்றே, வெகு காலமாகப் பின்பற்றி வரும் கருத்தாயிற்றே, என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. எதையும் அறிவு கொண்டு அலசிப்பார். எது உனது புத்திக்குச் சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள் என்றார்.

Periyar's Sayings - Education/கல்வி

Education

Only education self-respect and rational qualities will uplift the down-trodden.It is dangerous for people to support scriptural pundits as using burning stick to scartch an itching scalp; they have no alternative means of livelihood; and therfore we should be ever watchful in out contact with these pundits.

Why should anyone, in the name of caste, be considered lowly or be made to do a mean job?. If all in the country are given education, can there exist a caste for doing mean work?. It is not because of lack of education that those people are constrained to do contemptible work and are considered lowly?

Edit the poems of Bharathidasan, and prescribe them as texts, as suited to each class at school. Knowledge that can normally be gained in five years can be had in a year, by reading them.

Students should not waste their scholl life, as it is very, very precious. Their mind should not be distracted by any event out side. Particularly, students should not participate in agitations.


கல்வி

கல்வியின் பயன்

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசிய மெல்லாம், ஒருவன் தனது வாழ் நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது, உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்க்உவது என்பதாகும். அதாவது, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக வேண்டும்.

பொதுப் படிப்புக்காக ஒரு பையன் 15 வருடம் அதாவது வருடத்திற்கு ஒரு வகுப்புத் தேறினாலும் பி.ஏ. முடிக்க 15 வருடம் படிக்க வேண்டுமென்றால் இது மிகவும் அநீதியான காரியமாகும். ஏனெனில் 6ஆம் வயதில் பையன் படிக்கத் துவங்கினால் பி.ஏ., க்கு 21 வருடம் ஆகி விடுகிறது. அப்புறம் தொழில் படிப்புப் படிக்க 3,4,5 வருடங்கள் தேவைப்படுகின்றன. பிறகு அவன் அதில் அனுபவம் பெற்றவனாவதற்கு 4,5 வருடமாகும். இவற்றால், பைய்னின் நல்ல மூர்த்தண்யமான ஆயுட்காலம் வீணாகப் போகிற தல்லாமல் பெற்றோர்களுக்கும் எவ்வளவு பணம்; எவ்வளவு நாளைச் செலவிட வேண்டியிருக்கிறது. எத்தனைக் காலத்தை மாணவ வாழ்க்கையில் கழிப்பது? காலம், பணம் செலவழித்தவனுக் கெல்லாம் உத்தியோகம் கிடைக்கின்றதா? ஆதலால் ஒரு அளவுக் கல்வி வரை பொதுக் கல்வியாக எல்லாச் சமுதாய மக்களும், படிக்கும் வயது வந்த 100 க்கு 100 பேரும் படுக்கும் படியாகச் செய்துவிட்டு, உத்தியோகத்திற்கும், தொழிலுக்கும் அவசியமான அளவுக் கல்வியை மாத்திரம் சாதி வகுப்புப் பிரிவு மக்கள் எண்ணிக்கைப்படி கொடுத்து வரலாம். சர்க்கார் பொதுப் படிப்புக்கு அல்லாமல் அதற்கு வேண்டிய மக்கள் எண்ணிக்கைக்கு அல்லாமல் மேல் படிப்பு என்பதற்கு மக்கள் வரிப் பணத்தில் ஒரு காசும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.

தேர்வுகள் பற்றிய கருத்து

பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத்திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்கணமும் முக்கியப் பரீட்சையாக இருக்க வேண்டும். அந்தப் பரீட்டையும், உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில்தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே ஒழிய, பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருடமும் பரீட்சை என்பது தேவயில்லாததாகும்.

ஆசிரியன் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்இக் கொடுக்கும் போது கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்குவான். ஆனால், அதே ஆசிரியன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாமலிருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் செபிப்பான். ஆசிரியர்கள் விளக்கு ஏற்றி வைப்பது இருளைப் போக்க என்று கூற வேண்டுமே யொழிய விழுந்து கும்பிட அல்ல என்று கற்பிக்க வேண்டும்.

மாணவரின் இயல்பு

கெட்டியான வஸ்துக்கள் சுலபத்தில் தீப் பற்றுவதில்லை. தீப்பற்றி விட்டால் சுலபத்தில் அணைவதில்லை; நெடு நின்று எரியும் சக்தி உள்ளவை. சீக்கிரத்தில் தீப்பிடிக்கும் வஸ்துக்களோ கெட்டியான வஸ்துக்களைப் போல் அதிக நேரம் எரிவதில்லை. சிறிது நேரத்திலேயே அணைந்து போகும். அப்படிப்பட்ட தன்மைக்குச் சமமான மாணவர்களைக் கூறலாம். எதையும் உடனே நம்பும் சுபவம் மாணவர்களுடையது. மாணவர்களின் உள்ளம் கெட்டியானதல்ல இலேசானதாக இருக்கும். அதுவும் தூய்மையானதாக இருக்கும். பட்டதும் பிடிக்கக் கூடிய தன்மை உள்ளது.

மதக்கல்வியின் இன்றியமையாமை

அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டுப் பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளர விடாமல் செய்துவிட்டால் சுதந்திர ஞானம் எப்படி ஏற்படும்?

கல்வி பற்றி மக்களின் குறிக்கோள்

பொதுவாக நான் சொல்லுவேன். நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும். படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் அன்று முதலே வேலை தேடித் திரிவதும், ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப் பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவை தான் கல்வியின் தன்மையாய் இருக்கின்றன.

இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படிவது போல் படிக்காதவன் படித்தவனுக்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால் படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிரப் படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது?

கல்வித் திட்டத்தில் திருக்குறளுக்குத் தரப்பட வேண்டிய இடம்

மூட நம்பிக்கை யொழிந்து அழிந்து செம்மைப்படத் திருக்குறள் செம்மையான வழிவகுத்துக் கொடுக்கும். குறள் கருத்துக்கள் நன்கு நாடெங்கும் பரப்பப்படுதல் வேண்டும். க்லவி என்றாலே திருக்குறள் கல்வி; அறிவு என்றாலே திருக்குறள் அறிவு என்றதான் கருதப்பட வேண்டியுள்ளது. இது தவிர்த்த அறிவு விளக்க இலக்கியம் வேறுண்டா?

பொதுக் கல்வித் திட்டம்

இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பேரால் பல கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக் கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாகப் பல ஆயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிடப் பகுத்தறிவுப் பள்ளிகள் என்னும் பேரால் ஒரு சில கள்ளிகளை மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப் பற்றியும், எந்தப் பற்றும் அற்ற வகையில், செல்லும்வரை சிந்தித்து முடிவுக்குவரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்றைய வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேசம் முதவியவை பெரும் அளவுக்க்உ மீதமாகி, மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரசுபர உதவி முதலியவை தானாக வளர்ந்து இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் குறைவற்ற செல்வத்துடனும், நிறைவுள்ள ஆயுளுடனும் வாழ்வார்கள் என்பது உறுதி.